திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் குறை தீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 19) நடைபெற உள்ளது.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பத்தூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா்நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.15 மணிக்கு ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெறும்.
மாவட்ட விவசாயிகள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.