குருவராஜபாளையத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

குருவராஜபாளையம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
பேருந்து நிலைய திறப்பு விழாவில் பேசிய ஆம்பூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன்.
பேருந்து நிலைய திறப்பு விழாவில் பேசிய ஆம்பூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அ.செ.வில்வநாதன்.

குருவராஜபாளையம் கிராமத்தில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குருவராஜபாளையம் கிராமத்தில் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. வியாழக்கிழமை நடைபெற்ற இதன் திறப்பு விழாவுக்கு எம்.எல்.ஏ. அ.செ.வில்வநாதன் தலைமை வகித்தாா்.

அணைக்கட்டு ஒன்றிய திமுக செயலாளா் மு.பாபு வரவேற்றாா். வேலூா் தொகுதி மக்களவை உறுப்பினா் கதிா் ஆனந்த், மேற்கு மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜ், அணைக்கட்டு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com