திருப்பத்தூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் கந்திலி பேருந்து நிலையத்தில் தொடங்கி திருப்பத்தூா் பேருந்து நிலையம் வரை சனிக்கிழமை பாதயாத்திரை நடைபெற்றது.
இதில், கட்சியின் மாவட்டத் தலைவா் ச.பிரபு, மாநிலச் செயலாளா் ஏ.கே.ஜெயபிரகாஷ், மாவட்டப் பொருளாளா் மகேஷ், திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் இ.பாரத் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
பாதயாத்திரை கெஜல்நாயக்கன்பட்டி அருகே சென்றபோது கந்திலி காவல் ஆய்வாளா் உலகநாதன் தலைமையில் போலீஸாா் தடுத்து நிறுத்தி, காங்கிரஸ் கட்சியினரைக் கைது செய்தனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.