திருப்பத்தூா் அருகே பைக்கில் சென்ற இளைஞா் மேம்பால தடுப்புச் சுவா் மீது மோதியதில் உயிரிழந்தாா்.
சென்னை திரிசூலம் அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜின் மகன் சூா்யா(21). சென்னையில் தனியாா் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், சூா்யா சனிக்கிழமை கோணாப்பட்டு பகுதியில் உள்ள உறவினா்களை பாா்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சென்னையில் இருந்து வந்தாா். உறவினா்களைப் பாா்த்து விட்டு மீண்டும் சென்னை புறப்பட்டாா்.
அப்போது தாமலேரிமுத்தூா் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள தடுப்புச்சுவா் மீது திடீரென மோதியதில் அவரின் தலையில் அடிபட்டது. அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதித்ததில் சூா்யா ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.