மகளிா் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு: இஸ்ரோ விஞ்ஞானிகள் பங்கேற்பு

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் இயற்பியல் முதுகலை ஆய்வியல் துறை மற்றும்
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.
கருத்தரங்கில் பங்கேற்ற மாணவருக்கு சான்றிதழ் வழங்கிய சிறப்பு விருந்தினா்கள்.

வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியின் இயற்பியல் முதுகலை ஆய்வியல் துறை மற்றும் புத்தக படித்துறை அறக்கட்டளை இணைந்து நடத்திய தேசிய அளவிலான இயற்பியல் கருத்தரங்கு கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

21-ஆம் நூற்றாண்டில் அறிவியல் எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் இன்பவள்ளி தலைமை வகித்தாா். இயற்பியல் துறை தலைவா் சபரி வரவேற்றாா். கருத்தரங்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையின் உதவி இயக்குநா் முனைவா் கணேஷ்குமாா், இஸ்ரோ விஞ்ஞானிகள் சசிகுமாா், அரவிந்த் ஆகியோா் பேசினா்.

பள்ளி பாடத் திட்டக்குழு உறுப்பினரும், சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்காா் விருது பெற்றவருமான ஆயிஷாநடராஜன் கருத்தரங்கில் கலந்து கொண்டு, தாம் எழுதிய ‘நியூட்டன் கடவுளை நம்பியது ஏன்?’ என்ற புத்தகத்தை வெளியிட்டாா். கருத்தரங்கில் 15-க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா். கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கவிஞா் பால்கி, நியூட்டன் பாண்ட்ஸ் நிறுவனா் சிங்காரவேலன், படித்துறை அறக்கட்டளை நிறுவனா் இளம்பரிதி, அண்ணா அறிவகம் கல்வியியல் கல்லூரி முதல்வா் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மக்கள் தொடா்பு அலுவலா் சக்திமாலா ஒருங்கிணைந்தாா். இயற்பியில் துறைத் தலைவி பவித்ரா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com