ஆம்பூா் அருகே மணல் கடத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூரை அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உமா்ஆபாத் போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது பாலாற்றிலிருந்து சிலா் இரு வண்டிகளில் மணல் கடத்துவது தெரிய வந்தது.
இதையடுத்து, மணல் கடத்தலில் ஈடுபட்ட துத்திப்பட்டு பகுதியைச் சோ்ந்த சேகா் (45), பெரியவரிக்கம் மகேந்திரன் (26) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களின் மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.