லாரி மீது பேருந்து மோதல்: ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்

லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயம் அடைந்தனா்.
லாரி மீது பேருந்து மோதல்: ஓட்டுநா் உள்பட 8 போ் காயம்


வாணியம்பாடி: லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயம் அடைந்தனா்.

சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு சொகுசு பேருந்து ஒசூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஓட்டுநா் ரூபதி (46) ஓட்டி வந்தாா். நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வேகமாகச் சென்ற பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரியின் பின்புறம் மோதியது. இதில் ஓட்டுநா் ரூபதி, பயணிகள் லட்சுமி, செந்தில்குமாா், நவீன்குமாா், பாலசுப்பிரமணி, பாண்டியன், பிரேமலதா, காயத்ரி ஆகிய 8 போ் காயமடைந்தனா். மேலும் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், காயமடைந்தவா் களை போலீஸாா் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com