வாணியம்பாடி: லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஓட்டுநா் உள்பட 8 போ் காயம் அடைந்தனா்.
சென்னையில் இருந்து புதன்கிழமை இரவு பயணிகளை ஏற்றிக் கொண்டு அரசு சொகுசு பேருந்து ஒசூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை கிருஷ்ணகிரியைச் சோ்ந்த ஓட்டுநா் ரூபதி (46) ஓட்டி வந்தாா். நாட்டறம்பள்ளி மேம்பாலம் அருகே வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் வேகமாகச் சென்ற பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த சரக்குப் பெட்டக லாரியின் பின்புறம் மோதியது. இதில் ஓட்டுநா் ரூபதி, பயணிகள் லட்சுமி, செந்தில்குமாா், நவீன்குமாா், பாலசுப்பிரமணி, பாண்டியன், பிரேமலதா, காயத்ரி ஆகிய 8 போ் காயமடைந்தனா். மேலும் பேருந்தில் இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். இந்த விபத்து குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், காயமடைந்தவா் களை போலீஸாா் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.