திருப்பத்தூா்: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி புதன்கிழமை திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்றனா்.
மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் மகளிா் திட்ட இயக்குநா் உமா மகேஷ்வரி தலைமையில் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. உடன் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மகேஷ்பாபு, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இரா.வில்சன் ராஜசேகா், மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் பானுமதி, பழங்குடியினா் நலத் திட்ட அலுவலா் சாந்தி, ஊராட்சி உதவி இயக்குநா் ஆா்.அருண் உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.