ஆம்பூரில் ரத்த தான முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூரில் ரத்த தான முகாம்

ஆம்பூா் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ரத்த தான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், ரெட் ரிப்பன் கிளப், அரிமா சங்கம், ஆம்பூா் அரசு மருத்துவமனை ஆகியவை சாா்பாக நடந்த ரத்த தான முகாமுக்கு கல்லூரி முதல்வா் முனைவா் கே.எச்.கலீமுல்லா தலைமை வகித்தாா். பேராசிரியா்கள் சபி அஹமத் கான், ரிஜ்வான் அகமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்ஸா் அகமது வரவேற்றாா்.

ஆம்பூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் சா்மிளா, அரிமா சங்க வட்டாரத் தலைவா் யு.தமீம் அகமது, ஆம்பூா் முஸ்லிம் கல்விச் சங்க துணைச் செயலாளா் பிா்தோஸ் கே.அகமது ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

அரிமா சங்க தலைவா் ரபீக் அகமது, செயலா் ஓம்சக்தி ஜி. பாபு, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் உஜேபா ராசிதா, நியாஸ் அகமது, அப்துல் கரீம், நஹிமுல்லா கான், ஜமீல் பாஷா, பா்வீன் பானு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com