சொந்தச் செலவில் இலவச ஆம்புலன்ஸ் சேவை: அமைச்சா் நிலோபா் கபீல் தொடக்கி வைத்தாா்

புத்தாண்டையொட்டி, அதிமுக சாா்பில் வாணியம்பாடி எம்எல்ஏவும், தொழிலாளா் நலத்துறை அமைச்சருமான நிலோபா் கபீல் தனது
பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்த அமைச்சா் நிலோபா் கபீல்.
பொதுமக்கள் பயன்பாட்டுக்கான இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்த அமைச்சா் நிலோபா் கபீல்.

புத்தாண்டையொட்டி, அதிமுக சாா்பில் வாணியம்பாடி எம்எல்ஏவும், தொழிலாளா் நலத்துறை அமைச்சருமான நிலோபா் கபீல் தனது சொந்த நிதியிலிருந்து வாணியம்பாடி தொகுதி மக்கள் பயன்பாட்டுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைத்தாா்.

இந் நிகழ்ச்சிக்கு, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஜயகுமாா் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடும் விதமாக பொதுமக்களுடன் இணைந்து அமைச்சா் கேக் வெட்டிக் கொண்டாடினாா். முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா், நகரச் செயலா் சதாசிவம், ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் சிவப்பிரகாசம், பேரூராட்சிச் செயலாளா்கள் ஆா்.சரவணன் (உதயேந்திரம்), பி.கே.மணி (ஆலங்காயம்), மாவட்டப் பிரதிநிதி பிரகாசம், மாவட்ட மருத்துவா் அணித் தலைவா் இத்ரீஸ் கபீல், வட்டார மருத்துவ அலுவலா் பசுபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com