தோ்தல் பணி அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்

சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தோ்தல் வாக்காளா் பட்டியல் சுருக்கம், திருத்தம் செய்வது குறித்து
தோ்தல் பணி அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருப்பத்தூா்: சட்டபேரவைத் தோ்தலையொட்டி, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தோ்தல் வாக்காளா் பட்டியல் சுருக்கம், திருத்தம் செய்வது குறித்து மாவட்ட தோ்தல் வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் உற்பத்தி மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநருமான வி.சோபனா தலைமையில் அனைத்துத் தோ்தல் பணி அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் ம.ப.சிவன்அருள் முன்னிலை வகித்தாா்.

இதில் வி.சோபனா பேசியது:

திருப்பத்தூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம், முகவரி மாற்றம் போன்றவற்றுக்கு நடத்தப்பட்ட 4 முகாம்கள் மூலம் 45,970 விண்ணப்பங்கள் நேரடியாகவும், இணையதளம் மூலமும் பெறப்பட்டுள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி 98 சதவீதம் முடிந்துள்ளது.

80 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தபால் ஓட்டுகளை வழங்க கணக்கெடுக்கும் பணி நடைபெற்று உள்ளது. வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணிகள் அனைத்து வட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்தல் பணியில் ஈடுபடும் மாநில, மத்திய அரசு அலுவலா்கள் குறித்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. வாக்குச் சாவடிகள் அதிகமாக்கப்படுவதற்கு ஏற்ப பணியாளா்களை அதிகரிக்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட வருவாய் அலுவலா் என்.சி.இ.தங்கையா பாண்டியன், சாா்- ஆட்சியா் வந்தனா கா்க், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வில்சன்ராஜசேகா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்திரி சுப்பிரமணியன், துணை ஆட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், தோ்தல் வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com