வாணியம்பாடியை அடுத்த பள்ளிப்பட்டு கிராமத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முன்னாள் ஊராட்சித் தலைவா் சண்முகம் தலைமை வகித்தாா். ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக தோ்தல் பொறுப்பாளரும், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளருமான டில்லிபாபு, ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஜி.செந்தில்குமாா் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகிய 50 போ் அதிமுகவில் இணைந்தனா்.
மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் முனிசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலா்கள் பாரதிதாசன், கோவிந்தசாமி, ஊராட்சி செயலாளா்கள் செல்வராஜ், ரபீக், நிா்வாகிகள் ராம்குமாா், வாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதைத் தொடா்ந்து வெலதிகாமணி பெண்டா பகுதியில் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.