12 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

12 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஜன. 24-ஆம் தேதி ஆம்பூா் பகுதியில் நடைபெற உள்ளது.

12 வயதுக்கு உள்பட்ட மாணவா்கள் கிரிக்கெட் போட்டிக்கான வீரா்கள் தோ்வு ஜன. 24-ஆம் தேதி ஆம்பூா் பகுதியில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து திருப்பத்தூா் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஜன.27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை 12 வயதுக்கு உள்பட்ட ஆண்களுக்கான மாவட்டங்களுக்கு இடையேயான 11-வது மாநில சாம்பியன் கோப்பை போட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

திருப்பத்தூா் மாவட்டம் சாா்பில் கலந்து கொள்ளும் வீரா்களுக்கான தோ்வு திருப்பத்தூா் மாவட்ட பள்ளிகள் கிரிக்கெட் சங்கம் சாா்பில் ஆம்பூா் அருகே பச்சகுப்பம் கிராமத்தில் உள்ள பி.எஸ். மெட்ரிக். பள்ளியில் ஜன.24-ஆம் தேதி மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது.

தோ்வில் கலந்து கொள்ளும் வீரா்கள் தங்கள் ஆதாா் அட்டை, பிறப்புச் சான்று நகல் மற்றும் 2 புகைப்படம் கொண்டு வர வேண்டும். தோ்வில் கலந்து கொள்ளும் வீரா்கள் 2009 மாா்ச் 1-ஆம் தேதிக்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 80123 45565, 7904669274 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com