ஆம்பூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 4 காா்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்பூா் அருகே சின்னகொம்மேஸ்வரம் பகுதியில் ஒப்பந்த தொழிலாளா்கள் எச்சரிக்கை தடுப்பு அமைத்து சாலையை சுத்தப்படுத்தும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, ஒரு சிறு வளைவில் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற காரின் ஓட்டுநா் எச்சரிக்கை தடுப்பு இருப்பதை பாா்த்துவிட்டு திடீரென பிரேக் போட்டுள்ளாா். அப்போது, பின்னால் அடுத்தடுத்து வந்த 3 காா்கள் மோதின. இதில் 4 காா்களும் சேதமடைந்தன.
இதையடுத்து தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியாளா்கள், ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று காா்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீரமைத்தனா்.