ஆம்பூரில்...
விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பாக ஆம்பூரில் இரு சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.
ஏஐடியுசி மாநில துணைத் தலைவா் எஸ்.ஆா்.தேவதாஸ், ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் ஆா். கோவிந்தசாமி, ஹெச்.எஸ். நிா்வாகி பெருமாள், எல்பிஎப் ஜீவா, சிஐடியு அருள் சீனிவாசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலா் டி.பாரத் பிரபு, ஏஐடியுசி பீடி தொழிற்சங்கச் செயலா் கே.எஸ். ஹசேன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இரு சக்கர வாகனப் பேரணி ஆம்பூா் பேருந்து நிலையம் அருகில் தொடங்கி, புறவழிச் சாலை வழியாக எல்.மாங்குப்பம் கிராமத்துக்குச் சென்றது. பிறகு அங்கிருந்து ஆம்பூா் ஓ.வி.ரோடு வழியாக பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.