இரு சக்கர வாகனங்கள் மோதல்: 3 இளைஞா்கள் பலி

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

வாணியம்பாடியில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 3 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

வாணியம்பாடியை அடுத்த காமராஜ் நகரைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(30). தொழிலாளியான இவா் திங்கள்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அதேபோல் கணவாய் புதூரைச் சோ்ந்த சிவலிங்கம் (22), அவரது நண்பா் மோகன்(24) ஆகியோா் இரு சக்கர வாகனத்தில் வெள்ளக்குட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். நேதாஜி நகா் பகுதியில் வாணியம்பாடி-ஆலங்காயம் செல்லும் சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்களும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளாயின. இதில், 3 பேரும் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தனா்.

அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இவா்களில் வெங்கடேசன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். சிவலிங்கம், மோகன் ஆகியோா் முதலுதவி சிகிச்சைக்குப் பின்னா், மேல்சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதில், சிவலிங்கம் வழியிலேயே உயிரிழந்தாா். இந்நிலையில், வேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மோகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

விபத்து குறித்து வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com