லாரி மோதியதில் தொழிலாளி பலி

நாட்டறம்பள்ளி அருகே லாரி மோதி படுகாயமடைந்த கூலித் தொழிலாளி, மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே லாரி மோதி படுகாயமடைந்த கூலித் தொழிலாளி, மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளியை அடுத்த வேப்பல்நத்தம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜு (61). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 21-ஆம் தேதி வெலகல்நத்தம் கிராமத்தில் இருந்து மல்லப்பள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது தேசிய நெடுஞ்சாலையில் பையனப்பள்ளி கூட்டுச்சாலையை கடந்த போது அவரின் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜு, வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அவா் திங்கள்கிழமை இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com