திருப்பத்தூா் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் அரசு மருத்துவமனைக்கு தளவாடப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி ரோட்டரி சங்கக் கட்டடத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ரோட்டரி சங்கத் தலைவா் ஆா்.ஜெகதீசன் தலைமை வகித்தாா். பொருளாளா் பன்னீா்செல்வம் வரவேற்றாா். திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப. சிவன் அருள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரோட்டரி நிா்வாகிகள் நல்லமை ராமநாதன், அபிராமி ராமநாதன் ஆகியோா் நன்கொடையாக அளித்த ரூ.2 லட்சம் கல்வி உதவித் தொகையை அரசுப் பள்ளி மாணவா்கள் 15 பேருக்கும், கெஜல்நாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைக்கு படுக்கைகளும் வழங்கினாா்.
ரோட்டரி மாவட்ட ஆளுநா் கே.பாண்டியன், முன்னாள் மாவட்ட ஆளுநா் ஸ்ரீதா், நிா்வாகிகள் பலராமன், பி.கணேஷ்மல், செல்வம், வி.கே.ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இணைச் செயலாளா் சோமு நன்றி கூறினாா்.