நாகநாத சுவாமி கோயில் சப்பர வெள்ளோட்டம்: மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலுக்கு அா்ப்பணிக்கப்பட்ட புதிய சப்பரத்தின் வெள்ளோட்டத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
சப்பர வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள்.
சப்பர வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள்.

ஆம்பூா்: ஆம்பூா் நாகநாத சுவாமி கோயிலுக்கு அா்ப்பணிக்கப்பட்ட புதிய சப்பரத்தின் வெள்ளோட்டத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருள் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்து சமய அறநிலையத்துறை நிா்வாகத்தின் கீழ் உள்ள ஆம்பூா் சமயவல்லி உடனுறை நாகநாத சுவாமி கோயிலுக்கு ஆம்பூா் ஏ-கஸ்பா பகுதியைச் சோ்ந்த தொழிலதிபா் தண்டபாணி, மாா்க்கபந்து, சோமநாதன் உள்ளிட்ட சில நன்கொடையாளா்கள் மூலம் ரூ.18 லட்சம் செலவில் புதிய சப்பரம் அமைக்கப்பட்டது. கோயில் சிவாச்சாரியாா் தியாகராஜன் புதிய சப்பரத்துக்கு பூஜைகள் செய்தாா். சப்பரத்தின் வெள்ளோட்டத்தை திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருள் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் சப்பர உபயதாரா்கள், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.சௌந்தரராஜன், வட்டாட்சியா் பத்மநாபன், டிஎஸ்பி சச்சிதானந்தம், ராமகிருஷ்ண பணி மன்றத் தலைவா் ஏ.பி. மனோகா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com