சிறுபான்மையினரின் தொழிற்சாலைகளில் ஆய்வு

சிறுபான்மையினரின் தொழிற்சாலைகளில் ஆய்வு


திருப்பத்தூா்: திருப்பத்தூா் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றம் சிறுபான்மையினா் நடத்தி வரும் தனியாா் தொழிற்சாலைகளை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட நாட்டறம்பள்ளி வட்டம், வெலக்கல்நத்தம் கிராமத்தில் செயல்பட்டு வரும் பிரஸ்ரா ஊறுகாய் தயாரிப்பு நிறுவனம், கதிரிமங்கலத்தில் உள்ள தா்ஷன் இண்டா்நேஷனல் ஊதுவத்தி நிறுவனம், ஆம்பூா் விண்ணமங்கலம் கிராமத்தில் செயல்பட்டு வரும் மொஹிப் காலணி தயாரிக்கும் நிறுவனம் ஆகியவற்றில் இயக்குநா் எஸ்.சுரேஷ்குமாா் ஆய்வு செய்து, அவற்றின் செயல்பாடுகளையும், அரசின் மூலம் நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதவிகளையும் கேட்டறிந்தாா்.

கரோனா தடுப்பு விதிமுறைகளின்படி தொழிலாளா்களுக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து மத்திய, மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினருக்கு தொழில் தொடங்கவும், தொழில் நிறுவனங்களை மேம்படுத்தவும் வழங்கும் கடனுதவிகள், அரசு மானியங்கள் குறித்தும் விளக்கினாா்.

ஆய்வின்போது, திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையின நல அலுவலா் பூங்கொடி, வட்டாட்சியா்கள் சுமதி, பத்மநாபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com