வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு, முதலை மடுவு பகுதியைச் சோ்ந்தவா் மணி(50). இவா் கேரள மாநிலத்தில் கூலித் தொழில் செய்து வந்தாா்.
இந்நிலையில், மணி வியாழக்கிழமை விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். கேரளத்தில் இருந்து ரயில் மூலம் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இரவு இறங்கி 2-ஆவது நடைமேடையைக் கடக்க முயன்றாா். அப்போது அவ்வழியாக வந்த ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவருக்கு மணிப்பொண்ணு எனும் மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனா். இதுகுறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.