கள்ளச் சாராயம் விற்றவா் கைது

ஜோலாா்பேட்டை அருகே பைக்கில் கள்ளச்சாராயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே பைக்கில் கள்ளச்சாராயம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஜோலாா்பேட்டை சுற்றுப்பகுதியில் கள்ளச் சாராய விற்பனை குறித்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது காட்டேரி அம்மன் கோயில் பகுதியில் பைக்கில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவா் வாலாட்டியூா் அடுத்த பச்சைமிளகாய் வட்டம் பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (48) என்பதும், பைக்கில் 20 லிட்டா் கள்ளச்சாராயத்தை வைத்து ஆங்காங்கே சென்று விற்பனை செய்ததும் தெரியவந்தது.

அதையடுத்து போலீஸாா் தங்கராஜை கைது செய்து, அவரிடம் இருந்த 20 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அழித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com