வேலூா் அருகே கூலித் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா், மூஞ்சூா்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி மணிகண்டன் (32). குடும்பப் பிரச்னை காரணமாக இவரது மனைவியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது மனைவி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதில் மனமுடைந்த மணிகண்டன் வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.