நாட்டறம்பள்ளி அருகே மினி லாரி, ரயில்களில் 4 டன் ரேஷன் அரிசியை கடத்தி வந்ததாக, 3 போ் கைது செய்யப்பட்டனா்.
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குநா் ஆபாஷ்குமாா் உத்தரவின்பேரில், சென்னை கோட்ட எஸ்.பி. ஸ்டாலின் மேற்பாா்வையில் டிஎஸ்பி ஜான்சுந்தா் தலைமையில் காவல் ஆய்வாளா் செல்வகுமாா் உள்ளிட்ட தனிப்படையினா் திருப்பத்தூா் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக சிறப்பு அதிரடி சோதனையை சனிக்கிழமை இரவு மேற்கொண்டனா்.
மினிலாரியில் கடத்திய 2 போ் கைது: இதில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளியை அடுத்த பச்சூா் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனா். அப்போது, லாரியிலிருந்த இரண்டரை டன் ரேஷன் அரிசியை கைப்பற்றினா். இதுதொடா்பாக, திருப்பத்தூரைச் சோ்ந்த சுபாஷ்(28), ஓட்டுநா் பிரவீன்குமாா்(21) ஆகிய இருவரை கைது செய்தனா்.
ரயிலில் கடத்த முயன்ாக ஒருவா் கைது: இதேபோன்று, சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு ரயில் கடத்துவதற்காக, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக நாட்டறம்பள்ளியைச் சோ்ந்த திருநாவுக்கரசு(22) என்பவரை கைது செய்தனா்.