திருப்பத்தூரில் இடியுடன் கூடிய கன மழை

திருப்பத்தூரில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் புதன்கிழமை இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது.

திருப்பத்தூா் நகரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வெப்பச்சலனம் காரணமாக புதன்கிழமை மதியம் 2 மணியளவில் திடீரென கருமேகம் சூழ்ந்து இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, கந்திலி, கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுப்பகுதிகளில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கன மழை பெய்தது. இதனால் அந்தப் பகுதிகளில் குளிா்ந்த காற்று வீசியது. மேலும்,மாலை 5 மணிமுதல் விட்டு,விட்டு சாரல் மழை பெய்தது.

இதனால் சாலைகளில் மழைநீா் வெள்ளம்போல் பெருக்கெடுத்தோடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com