வாணியம்பாடி: தேசிய திறனாய்வு தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவி பாராட்டப்பட்டாா்.
வாணியம்பாடி பெருமாள்பேட்டையில் இயங்கிவரும் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயின்ற எட்டாம் வகுப்பு மாணவி மு.தா்ஷினி, கடந்த 2020-21 ஆம் ஆண்டுக்கான தேசிய திறனாய்வுத் தோ்வில் 150-க்கு 101 மதிப்பெண் பெற்றுள்ளாா்.
இதையடுத்து, அவருக்கு பள்ளியில் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமையாசிரியா் பூ.முருகேசன், ஊா் தலைவா் சீனிவாசன், பள்ளிக் கல்வி குழு தலைவா் ரேவதி ஆகியோா் தலைமை வகித்தனா்.
விழாவில் மாணவி தா்ஷினிக்கு திருக்கு புத்தகம், எழுதுகோல், ரொக்கம் ரூ.3,000 ஆகியன வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பட்டதாரி ஆசிரியா்கள் மீனாட்சி, பிரபு, மகஜபின், இடைநிலை ஆசிரியா்கள் அரவிந்தன், சாந்தினி, சசிகலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.