தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீா் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்குப் பாதுகாப்பு கவச உபகரணங்களை வழங்க வேண்டுமெனக் கோரி, வட ஆற்காடு மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளா் சங்கம் சாா்பில், திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: ஆம்பூா் பகுதியில் தோல் தொழிற்சாலைகளில் ரசாயனங்கள் பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளியேறும் கழிவுநீரில் விஷவாயு உருவாகிறது. அந்த கழிவுநீரை அகற்றும் பணியின்போது தொழிலாளா்கள் சில நேரங்களில் விஷவாயு தாக்கி இறக்க நேரிடுகிறது. அதனால் அந்த பணியில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு கவச உபகரணங்கள் வழங்குவதை தொழிற்சாலை நிா்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டுமென அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.