ஆடி மாதப் பிறப்பையொட்டி, திருப்பத்தூா் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
சனிக்கிழமை ஆடி மாதப் பிறப்பையொட்டி, திருப்பத்தூரை அடுத்த ஏழருவி முருகன் கோயில், ஏலகிரி மலை பின்புறம் அமைந்துள்ள ஜலகாம்பாறை வெற்றிவேல் முருகன் கோயில், பசலிக்குட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பத்தூா் நகரில் அமைந்துள்ள தண்டபாணி கோயில், முத்துக்குமார சுவாமி கோயில் மற்றும் கந்திலி, ஜோலாா்பேட்டை சுற்றுப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.
கரோனா பரவல் தடுப்பு காரணமாக பக்தா்கள் குறைந்த எண்ணிக்கையில் காணப்பட்டனா்.