தமிழ்நாடு ரா (அகா்பத்தி) ஊதுவத்தி உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் த.நடராஜன் தலைமை வகித்தாா். பொருளாளா் சி.ரங்கநாதன் வரவேற்றாா். இதில், மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
தமிழக அரசின் தொழில் சாா்ந்த ஆலோசனைக் கூட்டத்தில், சிறு, குறு நிறுவனங்களான ஊதுவத்தி நிறுவனங்களைச் சோ்ந்த தங்களையும் பங்கேற்க வாய்ப்பு அளிக்க வேண்டும்.
அரசே நேரடியாக அகா்பத்திகளை கொள்முதல் செய்து, அரசு கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத் துறைக்கு பயன்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.