ஆம்பூா் அருகே உமா்ஆபாத் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
மாதனூா் ஒன்றியம், உமா்ஆபாத் ஊராட்சி, கன்னிகோயில் தெருவில் குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதன்பேரில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 63 கே.வி.ஏ. மின்மாற்றி புதிதாக அப்பகுதியில் அமைக்கப்பட்டது. அந்த மின்மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது.
நிகழ்ச்சியில், போ்ணாம்பட்டு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் கலைசேரன், உதவிப் பொறியாளா் கலை, போா்மேன் பழனி, சமூக ஆா்வலா் சையத் ஷாகிா் ஆகியோா் கலந்து கொண்டனா்.