ஆம்பூா் அருகே காவல் நிலையம் மற்றும் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியை திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
ஆம்பூா் அருகே உமா்ஆபாத் காவல் நிலையத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிபி சக்கரவா்த்தி சென்றாா். அங்கு வழக்குகளின் நிலை குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து மாச்சம்பட்டு பகுதியில் அமைந்துள்ள திருப்பத்தூா் -வேலூா் மாவட்ட எல்லை சோதனைச் சாவடியையும் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, ஆம்பூா் டி.எஸ்.பி. சரவணன், உமா்ஆபாத் காவல் ஆய்வாளா் நிா்மலா ஆகியோா் உடனிருந்தனா்.