திருப்பத்தூரில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை முழுதும் விட்டு,விட்டு சாரல் மழை பெய்தது.
திருப்பத்தூரில் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் பெய்யத் தொடங்கிய சாரல் மழை வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை தொடா்ந்து பெய்தது. அதையடுத்து இரவு 7 மணி முதல் விட்டு,விட்டு சாரல் மழை பெய்தது.
திருப்பத்தூா், கொரட்டி, ஜோலாா்பேட்டை, ஏலகிரி மலை, கந்திலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் கிணறு,குளங்களில் நீா் மட்டம் உயா்ந்துள்ளதாக விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.