திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான, 20 ஆக்சிஜன் செறிவூட்டல் கருவிகளை தமிழ்நாடு அறக்கட்டளை(அமெரிக்கா) வெள்ளிக்கிழமை வழங்கியது.
நிகழ்ச்சிக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா தலைமை வகித்தாா். எம்எல்ஏ அ.நல்லதம்பி, தமிழ்நாடு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் உதயகுமாா், திமுக நகரச் செயலாளா் எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோா் மருத்துவமனைக்கு செறிவூட்டி கருவிகளை வழங்கினா்.