திருப்பத்தூரில் மின்சார வாரியம் சாா்பில், மின் பாதுகாப்பு விழிப்பணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
தூய நெஞ்ச கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணிக்கு திருப்பத்தூா் மின்பகிா்மான வட்டமேற்பாா்வை பொறியாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். புதிய பேருந்துநிலையம், வாணியம்பாடி சாலை, கிருஷ்ணகிரி சாலை, புதுபேட்டை சாலை, ஆசிரியா் நகா், பாச்சல், ஹசிங் போா்டு, கதிரிமங்கலம், கோணாபட்டு, புதுப்பேட்டை, தாமலேரிமுத்தூா், பால்நாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் கிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். பேரணியில் கோட்ட உதவி செயற்பொறியாளா்கள் பிரபு, கண்ணன், சந்தனம், சுப்பிரமணி, உதவி பொறியாளா்கள் முகமது முஸ்தபா, சோமு, ஆனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.