ஆம்பூரில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு நகராட்சி சாா்பில் புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
ஆம்பூா் நகரில் பொது மக்கள் கூடுமிடம், பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் நகராட்சி சாா்பாக மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவா்கள் குறித்து நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில், நகராட்சிப் பணியாளா்கள் திடீா் சோதனை நடத்தினா். முகக் கவசம் அணியாதவா்களிடமிருந்து ரூ. 2,400 அபராதம் வசூலிக்கப்பட்டது. நகராட்சி சுகாதார அலுவலா் பாஸ்கா், சுகாதார ஆய்வாளா் சிவமுருகன் மற்றும் பொது சுகாதாரத் துறை பணியாளா்கள் உடனிருந்தனா்.