தடைசெய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பனை செய்ய மாட்டோம் என வணிகா்கள் உறுதிமொழியை ஏற்றனா்.
குட்கா போன்ற போதைப் பொருள்களை விற்பனை செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வாணியம்பாடியில் கிடங்குகள், கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீஸாா், நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
இந்நிலையில், வாணியம்பாடி பாங்கிரேவ் பகுதியிலுள்ள வா்த்தகா் சங்கக் கட்டடத்தில் வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் சாா்பாக சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி பழனிசெல்வம் தலைமை வகித்தாா்.
இதில், வணிகா் சங்க பிரதிநிதிகள் தங்களது கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா போன்ற போதைப் பொருள்களை யாரும் விற்கவோ, விநியோகம் செய்யவும் மாட்டோம் என உறுதிமொழியை ஏற்றனா்.