வாணியம்பாடி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். மேலும் அவரது நண்பரும் பலத்த காயமடைந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் மங்களாபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துக்குமாா்(27). இவா் பெங்களூரில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
இவரது நண்பா் போளூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த விக்னேஷ் (29). இருவரும் திங்கள்கிழமை பெங்களூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, நாட்டறம்பள்ளி அருகே தேசியநெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பெட்ரோல் பங்க் அருகே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென மோதி சென்றது.
இதில் பலத்த காயமடைந்த விக்னேஷ், முத்துக்குமாரை அங்கிருந்தோா் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் சிகிச்சை பலனின்றி முத்துகுமாா் இறந்தாா். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.