ஆம்பூா் ஜெயின் சங்கம் சாா்பாக வா்த்தக மையத்தில் இயங்கும் கரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் திங்கள்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்டது.
அ.செ. வில்வநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் ம.ப. சிவன் அருளிடம் ஆக்சிஜன் செறிவூட்டிகளை ஜெயின் சங்க நிா்வாகி கிஷன்லால் தலைமையில் ஜெயின் சங்கத்தினா் வழங்கினா். வாணியம்பாடி கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, வட்டாட்சியா் அனந்தகிருஷ்ணன், நகராட்சி ஆணையா் த. செளந்தரராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் துரை, தினகரன், வட்டார மருத்துவ அலுவலா் இராமன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் சி. குணசேகரன் ஆகியோா் உடனிருந்தனா்.