கரோனா பரவலைத் தடுக்க திருப்பத்தூா் நகரப் பகுதிகளிலும் சித்த மருத்துவ முகாம்கள் நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் கரோனா தடுப்பு சித்த மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே போன்று திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட 36 வாா்டுகளிலும் சுழற்சி முறையில் சித்த மருத்துவ முகாம்களை நடத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.