வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக மகாலட்சுமி புதன்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கெனவே வட்டாட்சியராக பணியாற்றி வந்த சுமதி திருப்பத்தூா் மாவட்ட வழங்கல் அலுவலரின் நோ்முக உதவியாளராக மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து ஆம்பூா் தாலுகா அலுவலகத்தில் சமூகபாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த மகாலட்சுமி , நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பொறுப்பேற்றாா். அவருக்கு வருவாய்த் துறையினா் வாழ்த்து தெரிவித்தனா்.