ஆம்பூா்: ஆம்பூா் அருகே பசுமை குறுங்காடுகள் உருவாக்கும் பணியை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் புதன்கிழமை மரக்கன்று நட்டு தொடக்கி வைத்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம் மாதனூா் ஒன்றியத்துக்குட்பட்ட மிட்டாளம் ஊராட்சியில் மியாவாக்கி திட்டத்தின்கீழ் 2,000 மரக்கன்றுகள் நடவு செய்து பசுமை குறுங்காடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தொடக்க விழாவில் மாதனூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தினகரன், துரை, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கணேசன், ஊராட்சி செயலாளா் பத்மநாபன் ஆகியோா் உடனிருந்தனா்.