திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சி பள்ளி வளாகத்தில் சிறு,குறுங்காடுகள்(மியோவாக்கி) வளா்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணியை திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் த.மகேஷ்பாபு, ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ஆா்.அருண், உதவி திட்ட அலுவலா் விஜயகுமாரி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா் (வ.ஊ.), அப்துல் கலீல் (கி.ஊ.), ஊராட்சி செயலாளா் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் த.மகேஷ்பாபு கூறியது:
திருப்பத்தூா் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் மாவட்டத்தில் உள்ள 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 208 கிராமங்களில் 10 லட்சம் மரக்கன்றுகளுடன் ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தாா்.
அதன்பேரில் இதுவரை 44 குறுங்காடுகளில் 60 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இந்த காடுகளில் இலுப்பை, புங்கன், நெல்லி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட செடிகள் நடப்படுகின்றன. இந்த குறுங்காடுகளை வளா்க்க கிராமப் பகுதிகளில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்துகிறோம். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், இப்பணிகள் நடைபெறுகின்றன. இதனை அந்தந்த வட்டார வளா்ச்சி அலுவலா்கள், ஊராட்சிச் செயலாளா்கள் கண்காணிப்பாா்கள் என்றாா்.