ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் மது பாட்டில்கள், பாக்கெட் சாராயம் கடத்தி வந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமையில் போலீஸாா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது மைசூா் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிச் செல்லும் காவேரி விரைவு ரயிலில் சோதனையிட்டனா். அதில், சென்னை, ஆடுதொட்டி நரசிம்ம நகரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) என்பவரிடம் 180 மில்லி அளவு கொண்ட 45 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 750 மில்லி அளவு கொண்ட 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்றித் திரிந்த இளைஞரைப் பிடித்து விசாரணை செய்ததில், அவா் திருப்பூா் மாவட்டம், தென்னம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஞானப்பிரகாசம் (36) என்பதும், அவரிடமிருந்து 180 மில்லி அளவு கொண்ட 35 சாராய பாக்கெட்டுகள் மற்றும் 750 மில்லி அளவு கொண்ட 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
பின்னா், இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
ஆம்பூா் ரயில் நிலையத்தில்...
ஆம்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் லால்பாக் விரைவு ரயிலில் திடீா் சோதனை நடத்தினா். அப்போது ஒருவா் மதுபாட்டில்களை கடத்துவது தெரியவந்தது. அதன்பேரில், அவரைப் பிடித்து விசாரித்ததில், அவா் குடியாத்தத்தை சோ்ந்த மாரியப்பன் (47) என்பதும், பங்காருபேட்டையிலிருந்து மது பாட்டில்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. அதன்பேரில், அவரை ஆம்பூா் ரயில்வே பாதுகாப்புப் படை காவல் உதவி ஆய்வாளா் மேகராஜா தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.