திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு 21 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகள் மாவட்ட ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலையில் வழங்கப்பட்டன.
சென்னை எண்ணங்களின் சங்கமத்தின் ஒருங்கிணைப்பால் எம்.சி.கே.எஸ். அறக்கட்டளை மூலம் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 21 ஆக்சிஜன் செறிவூட்டி கருவிகளை திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு ஆட்சியா் அமா் குஷ்வாஹா முன்னிலையில், தலைமை மருத்துவா் எஸ்.செல்வக்குமாரிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
இதற்கான ஏற்பாட்டை உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவா் சொ.ரமேஷ் செய்திருந்தாா்.