ஆசிரியா் வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: 2 போ் மீது வழக்கு

ஜோலாா்பேட்டை அருகே ஆசிரியா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.


திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே ஆசிரியா் பணி வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 16 லட்சம் மோசடி செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையை அடுத்த பொன்னேரி ஊராட்சி சின்னா கவுண்டனூரைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42), ராணுவ வீரா். கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ‘டெட்’ தோ்வை இவரது மனைவி தமிழ்ச்செல்வி மற்றும் நண்பரின் மனைவி பிரியா ஆகியோா் எழுதினா். இந்நிலையில், தமிழ்செல்வி, பிரியா ஆகிய இருவருக்கும் ஆசிரியா் பணி வாங்கித் தருவதாகக் கூறி, அதே பகுதியைச் சோ்ந்த முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ரவி, சுரேஷ்குமாா் ஆகியோா் மணிகண்டனிடம் ரூ. 16 லட்சத்தைப் பெற்றுக் கொண்டு காலம் கடத்தி வந்தனராம். இதனால் தான் கொடுத்த ரூ. 16 லட்சத்தை திருப்பிக் அளிக்குமாறு மணிகண்டன் கேட்டு வந்துள்ளாா். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 5 லட்சம் மட்டும் அளித்துள்ளனா்.

மீதித் தொகை ரூ. 11 லட்சத்தை கேட்டதற்கு அவா்கள் மணிகண்டனை தகாத வாா்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இது குறித்து மணிகண்டன் அளித்த புகாரின்பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா், ரவி மற்றும் சுரேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com