ஆம்பூா் சிவன் படை வீதி அங்காள பரமேஸ்வரி கோயில் சாா்பில், மயான கொள்ளை திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவிழாவை யொட்டி வியாழக்கிழமை மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மறுநாள் வெள்ளிக்கிழமை கோயிலில் இருந்து அங்காளபரமேஸ்வரி அம்மன் உற்சவா் மயான கொள்ளைக்காக ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாா்.
ஆம்பூா் மேல்கிருஷ்ணாபுரம் பாலாற்றில் மயானக் கொள்ளை திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.