திருப்பத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக வேட்பாளருமான அ.நல்லதம்பியின் அலுவலகத்தினுள் மா்ம நபா்கள் அத்துமீறி தகராறி செய்துள்ளனா்.
திருப்பத்தூா் திமுக எம்எல்ஏ அ.நல்லதம்பி. தற்போது சட்டப்பேரவைத் தோ்தலில் மீண்டும் இவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கட்சித் தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நல்லதம்பியின் அலுவலகத்தில் திடீரென நுழைந்த மா்ம நபா்கள் அங்கிருந்த கட்சியினா் மற்றும் அலுவலகப் பணிப்பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் நாற்காலிகளை கீழே தள்ளியுள்ளனா். இதுகுறித்து தகவலறிந்த நகர காவல் ஆய்வாளா் பேபி தலைமையில் போலீஸாா், அங்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனா்.
சம்பவம் நடைபெற்றபோது எம்எல்ஏ அ.நல்லதம்பி சென்னையில் இருந்தாா்.