வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அருகே ஆசிரியா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, சந்தூா் கங்காவரத்தைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா் சிவகுமாா் (37). இவா், கடந்த ஜனவரி மாதம் நாட்டறம்பள்ளி அருகே கூலிப்படையினரால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டாா். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஆந்திர மாநிலம், பெத்தசெட்டிப் பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் கஜபதியை போலீஸாா் தேடி வந்தனா்.
இந்நிலையில், நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் அருண்குமாா் தலைமையில், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டறம்பள்ளியை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த கஜபதியை கைது செய்தனா்.