ஆம்பூரில் பள்ளி மாணவருக்கு கரோனா

ஆம்பூரில் பள்ளி மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சி தூய்மைப் பணியாளா்.
ஆம்பூா் இந்து மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சி தூய்மைப் பணியாளா்.

ஆம்பூா்: ஆம்பூரில் பள்ளி மாணவருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

ஆம்பூா் பேருந்து நிலையம் அருகில் உள்ள இந்து மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கான வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, அந்த மாணவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அவா் ஆம்பூா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அந்த பள்ளி வளாகத்தில் நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கிருமி நாசினி தெளித்தனா். அவருடன் வகுப்பில் படித்து வரும் மற்ற மாணவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மாணவா்கள், ஆசிரியா்கள் உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற சுகாதாரத் துறையினா் அறிவுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com