ஆம்பூா்: ஆம்பூா் வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில் நாயக்கனேரி மலை ஊராட்சியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்காக சட்ட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா் வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிபதி ஏ.கதிரவன் உத்தரவின்பேரில் நடந்த இந்த சட்ட விழிப்புணா்வு முகாமில், வழக்குரைஞா்கள் துளசிராமன், மூா்த்தி, அங்கன்வாடிப் பணியாளா் அனிதா ஆகியோா் கலந்துகொண்டு, உரையாற்றினா்.
ஆம்பூா் வட்ட சட்டப் பணிகள் முதுநிலை நிா்வாக உதவியாளா் கே.சித்ரா, உத்திரகுமாா் ஆகியோா் கலந்துகொண்டனா். ஆம்பூா் வட்ட சட்டப் பணிகள் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு முகக் கவசம் வழங்கப்பட்டது.